புதுச்சேரி, ஜூன் 26- புதுச்சேரி மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்க ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார். புதுவையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் அமலில் இருக் கும். இந்த தடைக்கால நிவாரணமாக மீனவர் களுக்கு தலா ரூ.5,500 வழங்கப்படும். இந்த ஆண்டு கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக மீனவர்கள் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் மீன்பிடி தடைக் காலம் கடந்த மாதம் 31ஆம் தேதி யுடன் முடிவடைந்ததாக மத்திய அரசு அறி வித்தது. இதையொட்டி மீனவர்கள் தங்க ளுக்கு தடைக்கால நிவாரணம் வழங்கக் கோரி அரசிடம் கோரிக்கை விடுத்தனர். இதற்கான கோப்பு தயார் செய்து துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அப்போது முதியோர் ஓய்வூதியம் பெறும் மீனவ குடும்பங்களுக்கு தடைக்கால நிவா ரணம் வழங்க முடியாது என்று ஆளுநர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதற்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் கண்டனம் தெரி விக்கப்பட்டது. அதிமுக எம்எல்ஏக்கள் ஆளு நர் மாளிகை முன்பு முற்றுகை போராட் டத்தில் ஈடுபட்டனர். மீனவர்களும் போராட் டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். இதற்கிடையில், கடலோர பகுதிகளை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோ சனை கூட்டத்தை அமைச்சர் நடத்தினார். இந்த நிலையில் கடந்த காலங்களை போலவே இந்த ஆண்டும் மீன்பிடி தடைக் கால நிவாரணம் வழங்க உத்தரவிடப் பட்டுள்ளது. அதாவது முதியோர் ஓய்வூ தியம் பெறும் குடும்பங்களுக்கும் கடந்த ஆண்டைப் போலவே தடைக்கால நிவார ணம் வழங்க கவர்னர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளதாக மீன்வளத்துறை செயலா ளர் பூர்வா கார்க் தெரிவித்துள்ளார். இந்த தொகை மீனவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றும், இதற்காக ரூ.12 கோடி ஒதுக்கப்பட்டுள்ள தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இதன் மூலம் சுமார் 19 ஆயிரம் மீனவ குடும்பத்தி னர் பயன் பெறுவார்கள்.